search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி கொலை"

    • பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
    • போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.

    வடவள்ளி:

    கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகள் ரமணி (வயது 20).

    இவர் கோவை பேரூரில் உள்ள தமிழ்க்கல்லூரியில் பி.காம் சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். அப்போது இவருக்கும், அதே கல்லூரியில் படித்த மத்துவராயபுரம் குறிஞ்சி நகரை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு காதல் ஏற்பட்டது.

    2 பேரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 6-ந்தேதி வேளாங்கண்ணியில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவருடன் அவரது வீட்டில் ரமணி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் 29-ந்தேதி வீட்டில் இருந்த ரமணி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காருண்யா நகர் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    இதற்கிடையே பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பதால், அவரது சாவுக்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து பெண்ணின் உடலை பெற்றுக்கொண்டனர்.

    பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ. ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் பேரூர் டி.எஸ்.பி. ராஜ பாண்டியன் பெண்ணின் கணவர் சஞ்சய், அவரது தந்தை, தாய், ரமணியின் தந்தையிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார்.

    சஞ்சயிடம் நடத்திய விசாரணையின் போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகம் அதிகரிக்கவே அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றதையும், தனக்கு தாய், தந்தை உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

    போலீசாரிடம் சஞ்சய் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், ரமணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கல்லூரியில் படிக்கும் போதே, என்னுடன் படித்த மற்றொரு மாணவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

    ரமணியை காதலித்த போதே, அந்த பெண்ணுடனும் பேசி வந்தேன். இந்த பழக்கம் திருமணத்திற்கும் பிறகும் நீடித்தது. அடிக்கடி அவருடன் நான் செல்போனில் பேசி வந்தேன்.

    இது முதலில் ரமணிக்கு தெரியாமல் இருந்தது. திருமணம் முடிந்த பின்னர் நான் செல்போனில் அடிக்கடி பேசுவதால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. மேலும் நான் அந்த பெண்ணுடன் பேசுவதும் அவருக்கு தெரிந்து விட்டது. இதனை அவர் கண்டித்தார்.

    ஆனாலும் நான் தொடர்ந்து பேசி கொண்டிருந்தேன். இதனால் எங்களுக்கு திருமணம் ஆன சில நாட்களில் இருந்தே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று நான், அந்த பெண்ணிடம் போனில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது இதனை எனது மனைவி ரமணி பார்த்து விட்டார்.

    இதனால் எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், ரமணியை அடித்து உதைத்து, கழுத்தை பிடித்து நெரித்து கீழே தள்ளினேன்.

    இருப்பினும் ஆத்திரம் அடங்காத நான், வீட்டில் இருந்த அவரது துப்பட்டாவை எடுத்து அவரது கழுத்தை கட்டி இறுக்கினேன்.

    இதில் சிறிது நேரத்தில் ரமணி துடிதுடித்து இறந்து விட்டார். இதுகுறித்து எனது தாய், தந்தைக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறினேன்.

    அவர்கள் வந்த பின்னர் இதில் இருந்து தப்பிப்பதற்காக 3 பேரும் சேர்ந்து ரமணி தற்கொலை செய்து கொண்டது போல காண்பிக்க திட்டமிட்டோம்.

    உடனே அவரை தூக்கி வைத்து துணிகளை கழற்றி விட்டு, வீட்டில் சமைப்பதற்கு வைத்திருந்த மஞ்சள் பொடியை எடுத்து ரமணியின் உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்தோம். பின்னர் மாற்று துணியை கட்டி விட்டு, ஏற்கனவே வீட்டில் இருந்த சாணிப்பவுடரை எடுத்து வாயில் ஊற்றினோம். இதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டார் என அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தோம்.

    அவர்களும் ஓடி வந்து, புளியை வாயில் கரைத்து ஊற்றினர். பின்னர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ரமணியை கொண்டு சென்றோம். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூறினர்.

    இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்ற போது, ரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் இறந்து விட்டது எங்களுக்கு ஏற்கனவே தெரிந்தாலும் எதுவும் தெரியாதது போல காட்டி கொண்டோம்.

    போலீசார் விசாரித்த போதும், சாணிப்பவுடர் குடித்து விட்டார் என்றே தெரிவித்தோம். காயம் குறித்து கேட்டபோது மழுப்பலான பதிலேயே தெரிவித்து வந்தோம்.

    இருந்த போதிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதால் நான் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் புதுப்பெண் மர்மச்சாவு வழக்கை கொலை வழக்காக மாற்றினர். மேலும் புதுப்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்ததாக நாடகம் ஆடிய அவரது கணவர் சஞ்சய் மற்றும், அவருக்கு உடந்தையாக இருந்த சஞ்சயின் தந்தை லட்சுமணன், தாய் அம்முகுட்டி என்ற பக்ரு நிஷா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

    • குப்தாவின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையினர் ரூ.10 லட்சம் கேட்டனர்.
    • குப்தாவின் மனைவியை கொலை செய்ய கூலிப்படையினர் ரூ.10 லட்சம் கேட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லி, ரஜோரி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குப்தா (வயது 71). இவரது மகன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் குப்தா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    திருமணம் முடிந்த பின்பு அந்த பெண் குப்தாவின் மகனை கவனிக்க மறுத்தார். மேலும் குடும்பத்திலும் பிரச்சினையை ஏற்படுத்தினார். இதனால் குப்தா மனம் உடைந்தார். அவர் 2-வது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

    இதற்காக 2-வது மனைவியிடம் பேச்சு நடத்திய போது அவர் குப்தாவுக்கு விவாகரத்து கொடுக்க தனக்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என்றார். இதனை கேட்ட குப்தா ஆத்திரம் அடைந்தார்.

    இதையடுத்து குப்தா மனைவியை கொலை செய்து விட முடிவு செய்தார். இதற்காக கூலிப்படையை அமர்த்த ஏற்பாடு செய்தார். அதன்படி டெல்லியை சேர்ந்த விபின், ஹிமாண்டி ஆகியோரை சந்தித்து பேசினார். அவர்கள் குப்தாவின் மனைவியை கொலை செய்ய ரூ.10 லட்சம் கேட்டனர். அவர்களுக்கு முன்பணமாக ரூ. 2.40 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட கூலிப்படையினர், குப்தாவின் 2- வது மனைவியை கொலை செய்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குப்தாவை கைது செய்தனர். அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூலிப்படையினர் விபின், ஹிமாண்டி ஆகியோரும் பிடிப்பட்டனர். அவரகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தர்மய்யா இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரில் உள்ள அக்கா நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • ஆந்திரா மாநிலம் புரட்டிரெட்டி கண்டிகை பகுதியில் பதுங்கி இருந்த தர்மய்யாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள புட்டிரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் தர்மய்யா. கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 22). இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே கரடிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோப்பில் தர்மய்யா தனது குடும்பத்துடன் தங்கி காவல் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 23-ந் தேதி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தர்மய்யா இருசக்கர வாகனத்தில் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தனது சொந்த ஊரில் உள்ள அக்கா நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த தர்மய்யாவிடம் அக்கா நிர்மலா மனைவி எங்கே என்று கேட்டார். அப்போது மனைவியை அடித்து கொலை செய்து மாந்தோப்பிலேயே புதைத்து விட்டதாக போதையில் கூறி உள்ளார்.

    இதுபற்றி போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதிரிவேடு மாந்தோப்பு பகுதியில் தோண்டிப்பார்த்தபோது அழுகிய நிலையில் பெண் பிணம் இருப்பது தெரிய வந்தது.

    விசாரணையில் அது தர்மய்யாவின் மனைவி லட்சுமி என்பது தெரிய வந்தது. மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தர்மய்யாவை தேடிவந்தனர். அவர் ஆந்திரா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரயா சக்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் மற்றும் தனிப்படை போலீசார் ஆந்திரா மாநிலத்திற்கு விரைந்து சென்று அவரை தேடி வந்தனர். அப்போது ஆந்திரா மாநிலம் புரட்டிரெட்டி கண்டிகை பகுதியில் பதுங்கி இருந்த தர்மய்யாவை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து பாதிரிவேடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு வைத்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • ஷரவன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
    • யமுனா நதியில் இருந்து உஷாவின் உடலை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    நொய்டா:

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள சட்டங்கா குர்த் கிராமத்தில் வசித்து வருபவர் ஷரவன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உஷா.

    இந்த நிலையில் ஷரவன் தனது மனைவி உஷாவை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அலிகாரில் வசித்து வந்த உஷாவின் பெற்றோரும் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் உஷாவை ஷரவன் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கூறி உள்ளனர்.

    இதையடுத்து போலீசார் ஷரவனை காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தனது மனைவி உஷாவை கொலை செய்து சாக்கு மூட்டையில் உடலை போட்டு கல்லை கட்டி யமுனை ஆற்றில் போட்டு விட்டதாக தெரிவித்தார்.

    கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது தனது மனைவிக்கும் கிராமத்தில் இருக்கும் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் அதனால் மனைவி உஷா தினமும் தன்னிடம் சண்டை போட்டதால் அவரை கொன்றேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஷரவன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். யமுனா நதியில் இருந்து உஷாவின் உடலை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

    • 2 ஆண்டுகளாக வீட்டு வேலைகளை செய்து வருகிறேன்
    • கணவர் வாக்குமூலம்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த தோப்புக்கான சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மதன்ராஜ், கார்த்திகேயன் என 2 மகன்கள் உள்ளனர். பானுமதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை மகன்கள் இருவரும் டியூஷன் சென்று விட்டனர். அந்த நேரத்தில் கணவன் மனைவியிடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சேட்டு பானுமதி கழுத்தை நெறித்தார்.

    மேலும் தலையானால் முகத்தை அமுக்கி கொலை செய்தார். பின்னர் எதுவும் நடக்காதது போல் வெளியே சென்று விட்டார்.

    டியூசன் முடிந்து வந்த அவரது மகன்கள் தாய் படுத்திருப்பதாக நினைத்து எழுப்பினர். அவர் எழுந்தி ருக்காததால் உடனடியாக பானுமதியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாய கமூர்த்தி விசாரணை நடத்தினார். இதில் சேட்டு பானுமதியை கொலை செய்தது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இது தொடர்பாக சேட்டு போலீசில் அளித்த வாக்குமூ லத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி பானுமதிக்கு கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு கர்ப்பப்பை பிரச்சனை காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.

    அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் 2 ஆண்டுகளாக வீட்டில் வேலைகளை நான் தான் கவனித்து வந்தேன். ஆனாலும் எனது மனைவி வேலை சரியாக செய்யவில்லை எனக் கூறி திட்டிக் கொண்டே இருந்தார். சம்பவத்தன்று எனது மகன்கள் டியூசன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் நான் சரியாக கவனிப்பதில்லை வேலை செய்வதில்லை எனக்கூறி பானுமதி என்னை திட்டினார்.

    இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரது கழுத்தை நெரித்தும் தலையனையை முகத்தில் வைத்து அழுத்தியும் கொலை செய்தேன். பின்னர் எதுவும் தெரியாதது போல நடந்து கொண்டேன். மருத்துவ பரிசோதனையில் நான் கொலை செய்ததை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தோப்புக்கான சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மதன்ராஜ், கார்த்திகேயன் என 2 மகன்கள் உள்ளனர்.

    பானுமதிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை மகன்கள் இருவரும் டியூசன் சென்றிருந்தனர். அந்த நேரத்தில் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சேட்டு பானுமதியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். மனைவி பிணத்தை வீட்டுக்குள் போட்டு விட்டு அவர் எதுவும் தெரியாதது போல் வெளியே சென்றுவிட்டார்.

    அவரது மகன்கள் டியூசன் விட்டு வீட்டிற்கு இரவு 7 மணி அளவில் வந்தனர். அப்போது பானுமதியை எழுப்ப முயன்றனர்.

    பானுமதி எழுந்திருக்காததால் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் உதவியுடன் ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பானுமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி பானுமதியின் கணவர் சேட்டுவிடம் விசாரணை நடத்தினார். அப்போது சேட்டு மனைவி உடல்நிலை சரியில்லாததால் தான் இறந்தார் என கூறினார்.

    மேலும் போலீசார் தீவிர விசாரணையில் குடும்ப தகராறில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் சேட்டு மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கடலாடி சாவடி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52). போளூர் அரசு ஆண்கள் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி ஜெயந்தி (50), இவர்களுக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும் மகளுக்கும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர்.

    முருகனுக்கும் ஜெயந்திக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் குடும்ப பிரச்சனையால் ஜெயந்தி மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் ஜெயந்தி தூங்கிக் கொண்டிருந்தார்.

    அதிகாலையில் முருகன் கண்விழித்தார். அவர் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி ஜெயந்தியை நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கினார். இதில் ஜெயந்தி துடிதுடித்து இறந்தார்.

    இதனையடுத்து முருகன் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

    இது சம்பந்தமாக தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஜெயந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரணடைந்துள்ள முருகனிடம் கடலாடி போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

    • வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அண்டை வீட்டார் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
    • போலீசார் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

    சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த பவன் தாக்கூர் என்பவர் தனது மனைவி சாஹு என்பவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரத்தில் மனைவியைக் கொன்ற பவன் தாக்கூர், உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார். இதனிடையே, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அண்டை வீட்டார் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் பவன் தாக்கூரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
    • ஆத்திரம் அடைந்த முனிராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் மகாதேஸ்வரா பெட்டாவை அடுத்த நாகமலைப்பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி.

    கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் லட்சுமி கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்தார். இருப்பினும் தொடர்ந்து முனிராஜ், மனைவியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மனைவியை பார்க்க வந்த முனிராஜ் சமரசம் பேசுவதற்காக அங்குள்ள மலைப்பகுதிக்கு கூட்டி சென்றார். அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனிராஜ், கீழே கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆத்திரம் தீராத முனிராஜ் இந்த காட்சியை செல்போனில் படம் எடுத்தார். வீடியோவாக படம் பிடித்த அவர் அந்த காட்சியை வாட்ஸ்அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். இந்த காட்சியை அவரது உறவினர்கள் பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் உடனடியாக முனிராஜை போனில் தொடர்பு கொண்டனர். இந்த விவரம் மாதேஸ்வரன் மலை போலீசாருக்கும் தெரியவந்தது. போலீசார் முனிராஜை தொடர்பு கொண்டனர்.

    இதனால் பதறிய முனிராஜ் வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மகாதேஸ்வரன் மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜெய்சங்கர் தினமும் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
    • புனிதா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி, சின்ன வரிக்கம் கிராமத்திலுள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    பேரணாம்பட்டு:

    வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே அழிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 43), கட்டிட மேஸ்திரி மற்றும் அதே கிராமத்தில் கடப்பா கல் விற்கும் கடை நடத்தி வந்தார்.

    இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இவருடன் வாழாமல் பிரிந்து சென்றுவிட்டார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த புனிதா (32) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நிவேதா (9) என்ற மகளும், நிதிஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

    ஜெய்சங்கர் தினமும் மது அருந்தி விட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் புனிதா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் தங்கி, சின்ன வரிக்கம் கிராமத்திலுள்ள ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் ஜெய்சங்கருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் புனிதா, ஜெய்சங்கரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினார். பின்னர் குழந்தைகள் கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

    இருப்பினும் ஜெய்சங்கருக்கு புனிதா நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 7.15 மணியளவில் ஷூ கம்பெனிக்கு செல்ல பஸ்சிலிருந்து இறங்கி அழிஞ்சிக்குப்பம் மெயின் ரோட்டில் புனிதா நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மதுபோதையில் வந்த ஜெய்சங்கர் புனிதாவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் தன்னிடம் இருந்த கத்தியால் புனிதாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் புனிதா மயங்கி விழுந்தார்.

    இதில் உயிருக்கு போராடிய புனிதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு புனிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு மற்றும் மேல்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கரை கைது செய்தனர். மேலும் போலீசார் இது சம்பந்தமாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெய்சங்கர் அவரது மனைவியை கத்தியால் குத்தும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • நேற்று இரவு மது போதையில் வந்த வேலாயுதம் மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டார்.
    • ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த சூரப்பட்டு, அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (48). இவர்களுக்கு மகனும், மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். வேலாயுதத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் தினந்தோறும் மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் வேலாயுதத்தை அம்பத்தூர் அருகில் உள்ள ஒரு போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரேவதி சேர்த்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து வேலாயுதம் வீட்டிற்கு வந்தார். அப்போது முதல் வேலாயுதம் மனைவியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். தன்னை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து பழி வாங்குவதாக கூறிவந்தார்.

    நேற்று இரவும் மது போதையில் வந்த வேலாயுதம் இதுதொடர்பாக மனைவி ரேவதியுடன் மோதலில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த வேலாயுதம் மனைவியை தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த ரேவதி அங்கேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ரேவதியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக மதுபோதையில் இருந்த வேலாயுதத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மனைவியை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜார்க்கண்ட் மாநிலம் சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீட்டில் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
    • ரூபிகா பழமையான பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

    டேராடூன்:

    டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா காதலனால் கொல்லப்பட்டு 35 துண்டுகளாக வெட்டப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அதே மாதிரியான நிகழ்வு நாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றன.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மனைவியை கொன்று அவரது உடலை 12 துண்டுகளாக கணவன் வெட்டியுள்ளான்.

    ஜார்க்கண்ட் மாநிலம் சந்தாலி மொமின் தோலா பகுதியில் உள்ள பழைய வீட்டில் ஒரு பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் ரூபிகா பஹாடின் என்றும், அவரை அவரது கணவர் தில்தார் அன்சாரி கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டியதும் தெரிய வந்தது. தில்தார் அன்சாரிக்கு 2-வது மனைவி ரூபிகா ஆவார்.

    உடலின் பல பாகங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. அவற்றை தேடும் பணியில் போலீசார் ஈடுபடுகிறார்கள். அந்த பெண் பழமையான பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொன்று உடலை 12 துண்டுகளாக வெட்டிய கணவர் தில்தார் அன்சாரியை கைது செய்தனர்.

    எலக்ட்ரிக் கட்டர் போன்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்தி உடலை பல துண்டுகளாக வெட்டியது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் மூலம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்துள்ளதாக மாநில அரசை பா.ஜனதா குற்றம் சாட்டி உள்ளது.

    ×